×

கரூர் வெங்கமேடு எஸ்பி காலனி அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 

கரூர், ஜூன்12: கரூர் வெங்கமேடு எஸ்பி காலனி பிரிவு அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் கலப்பதை பார்வையிட்டு சரி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் கோடை வெயில் உச்சத்தில் உள்ளது. வெயில் காரணமாக அனைத்து தரப்பினர்களும் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். மேலும், ஒரு சில பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.

இந்நிலையில், கருர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு எஸ்பி காலனி பிரிவு அருகே கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் கடந்து செல்கிறது. சாலையோரம் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இதுபோன்ற நிகழவுகள் நடைபெறாத வகையில் தடுத்து நிறுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்வதை கண்காணித்து அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கரூர் வெங்கமேடு எஸ்பி காலனி அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Karur Vengamedu SP Colony ,Karur ,
× RELATED செல்லாண்டிபாளையம் பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள்