×

கருப்பண்ணசாமி சிலை சேதம் பெண் பக்தர்கள் போராட்டம்

கமுதி, ஜூன் 12: கமுதி அருகே கருப்பண்ணசாமி சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கமுதி அருகே பொட்டக்குளம் கண்மாய் கரையில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சிலையின் இடது பக்க கையை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் சேதப்படுத்தி சென்றுள்ளனர். இது குறித்து அபிராமம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், பொட்டகுளம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யக் கோரி சாமி சிலை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இக்கோயில் தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்னை இருந்து வருவதாகவும், கடந்த 15 நாட்களுக்கு முன்பு 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

The post கருப்பண்ணசாமி சிலை சேதம் பெண் பக்தர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Karuppannaswamy ,Kamudi ,Karuppannasamy ,
× RELATED கமுதி பேரூராட்சியில் புதுப்பொலிவு பெறும் சிறுவர் பூங்கா