×

புதிய ரேஷன் கடை கட்ட வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

 

திருவாடானை, ஜூன் 12: திருவாடானை அருகே அரசூர் பகுதியில் கடந்த சுமார் 30 ஆண்டுகளாக ரேஷன் கடை தனியாருக்கு சொந்தமான ஓட்டு கொட்டகையில் செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடை மூலம் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் கடை செயல்பட்டு வரும் ஓட்டு கொட்டகையின் சுவர்களிலும், தளத்திலும் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளதால் தற்சமயம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

இதனால் அந்த ரேஷன் கடைக்கு நுகர்பொருட்கள் வாங்கச் செல்லும் முதியவர்கள் முதல் பெண்கள் வரை அனைவரும் ஒருவித அச்சத்துடன் சென்று வருகின்றனர். ஆகையால் அந்த பகுதியில் உள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அருகில் காலியாக உள்ள இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டித் தந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக ஆர்வலர் ஆறுமுகம் கூறுகையில்: இந்த பகுதியில் நீண்ட காலமாக ரேஷன் கடை தனியாருக்கு சொந்தமான ஓட்டு கொட்டகையில் செயல்பட்டு வருகிறது. அந்த ஓட்டு கொட்டகை தற்சமயம் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் அந்த ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்கச் செல்லும் அனைவரும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். ஆகையால் இந்த பகுதியில் உள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அருகில் காலியாக உள்ள இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டித்தந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமெனக் கூறினார்.

The post புதிய ரேஷன் கடை கட்ட வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Arasur ,Dinakaran ,
× RELATED திருவாடானை அருகே தீப்பிடித்து எரிந்த வைக்கோல்