- அவிநாசி பதிகம்
- Kumbabishekam
- அவிநாசி
- அவினாசி
- அவினாசிங்கேஸ்வரர் கோயில்
- சுந்தரமூர்த்தி நாயனார்
- அவினாசி பதிகம்
- Kumbabhishekam
அவிநாசி, ஜூன் 12: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் நேற்று சிறப்பு வழிபாடும், அவிநாசியில் சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய தேவாரம், அவிநாசி பதிகத்தை 10 ஆயிரத்து 8 முறை பாராயணம் செய்யும் நிகழ்ச்சியும் நேற்று நடைபெற்றது. இதில் சிவபக்தர்களும், சிவனடியார்களும் பங்கேற்று அனைத்துவித இன்னல்கள் நீங்கவும், விரைவில் அவிநாசி கோவிலில் கும்பாபிஷக விழா சிறப்பாக நடைபெற அருள் புரியவும் பிரார்த்தனை செய்து, ‘அவிநாசிபதிகம்’ பாராயணம் செய்தனர்.
முன்னதாக கருணாம்பிகையம்மனுக்கும் அவிநாசியப்பருக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் ஆரூர் சுப்பிரமணியம், ஓதுவார்கள், சிவன்மலை சந்திரசேகரன் பழனி விக்னேஷ், அமுத கணேசன், தாரமங்கலம் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட சிவ பக்தர்களும், சிவனடியார்களும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
The post அவிநாசி கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற அவிநாசி பதிகம் 10 ஆயிரத்து 8 முறை பாராயணம் appeared first on Dinakaran.