×

காட்டு யானைகள் அட்டகாசம்

 

பாலக்காடு, ஜூன் 12: பாலக்காடு வாளையார் தேசியசாலை அருகே கஞ்சிக்கோடு ஐஐடி, மலம்புழா சாலை, சுள்ளிமடை, ஆகிய இடங்களில் காட்டு யானைகள் குட்டியானைகளுடன் இரை, தண்ணீர் தேடி அலைந்து திரிந்தவாறு உள்ளன. இதனால் மலம்புழா அணை அருகாமையில் உள்ளதால் வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதற்கு அணையின் உட்பகுதிக்கு வனத்தைவிட்டு காட்டு யானைகள் கூட்டமாக குட்டி யானைகளுடன் உலா வருகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் விட்டைவிட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலைகள் உள்ளனர். எனவே வனத்துறை அதிகாரிகள் காட்டுயானைகளை அடர் வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காட்டு யானைகள் அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Palakkad ,Kanjikodu IIT ,Palakkad Valaiyar National Highway ,Malampuzha Road ,Sullimadai ,
× RELATED பாலக்காடு மாவட்டத்தில் கடும் வெயில்...