×

திருமண நிச்சயம் செய்த நிலையில் போலீஸ்காரர் தற்கொலை

மன்னார்குடி: நாகை வெளிப்பாளையத்தை சேர்ந்தவர் சந்தான மாரிமுத்து. இவரது மகன் பிரவீன்குமார்(31). இவர் மன்னார்குடி தாலுகா காவல் நிலையத்தில் கடந்த 2 வருடமாக காவலராக பணியாற்றி வந்தார். திருமணமாகாதவர். இவர் காவல் நிலையம் அருகே உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை அவர் நாலாம்நல்லூர் என்ற இடத்தில் மரத்தில் கயிற்றில் தூக்கில் சடலமாக தொங்கினார். தகவலறிந்த மன்னார்குடி போலீசார் அங்கு சென்று அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.முதல்கட்ட விசாரணையில், பிரவீன்குமாருக்கு திருமணம் செய்ய பெற்றோர் பெண் பார்த்துள்ளனர்.

ஒரு ெபண்ணை பார்த்து அவருடன், வரும் 28ம் தேதி நிச்சயதார்த்தம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரவீன்குமாருக்கு விருப்பமில்லாததால் மனமுடைந்து இருந்தார். இந்நிலையில் அவர் இன்று காலை தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post திருமண நிச்சயம் செய்த நிலையில் போலீஸ்காரர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Mannargudi ,Santana Marimuthu ,Nagai Pappalayam ,Praveen Kumar ,Mannargudi Taluk Police Station ,
× RELATED மன்னார்குடி அரசு மருத்துவமனையில்...