×

கட்டிலில் இருந்து விழுந்து குழந்தை சாவு: துக்கம் தாங்காமல் தந்தை தற்கொலை

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள ஏலாக்குறிச்சியை சேர்ந்தவர் தினேஷ்(26). இவர் அரியலூரில் உள்ள ஒரு பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி திவ்யா. இவர்களது குழந்தை விக்னேஷ்(2). நேற்று முன்தினம் மாலை வீட்டில் குழந்தையுடன் திவ்யா தனியாக இருந்தார். அப்போது குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தது. இதையடுத்து விக்னேஷை திருமானூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் குழந்தை இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து திவ்யா சரியாக கவனிக்காததால்தான் தனது குழந்தை இறந்தது எனக்கூறி, தினேஷ் கதறி அழுதார். இதைத்தொடர்ந்து தினேஷின் தாய்மாமா பழனிசாமி, தினேைஷ அழைத்துச்சென்று வெற்றியூரில் உள்ள தனது வீட்டில் தங்க வைத்தார்.

அங்கு குழந்தை இறந்த துக்கத்தில் இருந்த தினேஷ், நேற்று காலை வீட்டில் தனது கையில் காப்பர் கம்பியை சுற்றிக்கொண்டு, பிளக் ஓட்டையில் கம்பியை சொருகினார். இதில் மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார். திருமானூர் போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று காலை தினேஷ் முதற்கட்டமாக வீட்டில் உள்ள சமையல் சிலிண்டரை திறந்து விட்டு, தீ வைத்துக்கொள்ள முயன்றதும், அது தோல்வியில் முடிந்ததால், அவர் காப்பர் கம்பியை கையில் சுற்றி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து தினேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கட்டிலில் இருந்து விழுந்து குழந்தை சாவு: துக்கம் தாங்காமல் தந்தை தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Dinesh ,Elakurichi ,Thirumanoor ,Ariyalur district ,
× RELATED சித்தேரி கரையை சமூக விரோதிகள் உடைப்பு:...