துரைப்பாக்கம்: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பனையூர், அக்கரை உள்பட பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு 11 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் நள்ளிரவு ஒரு மணிவரை மின்சாரம் திரும்ப வராததால் அப்பகுதி மக்கள் பனையூர் பகுதியை ஒட்டிய சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 100க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுதிரண்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் கானாத்தூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், இப்பகுதிகளில் தொடர் மின்வெட்டு குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி, மீண்டும் மின்வெட்டு ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என போலீசார் உறுதியளித்தனர்.
The post கிழக்கு கடற்கரை சாலையில் மின்வெட்டை கண்டித்து மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.