- ரேஷன் கார்டு குறைப்பாளர் முகாம்
- கிருஷ்ணராயபுரம்
- கிருஷ்ணாரியாபுரம்
- கரூர் மாவட்டம்
- கலெக்டர்
- பிரபுசங்கர்
- உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
- தின மலர்
கிருஷ்ணராயபுரம். ஜூன் 11: கரூர் மாவட்டம், கலெக்டர் பிரபுசங்கர், உத்தரவுபடி உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, பொது விநியோகத் திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்-2013 மூலமாக பிரதி மாதம் 2வது வாரம் சனிக்கிழமையான நேற்று ரேஷன் கார்டு குறை தீர்க்கும் முகாம் கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் மோகன்ராஜ் தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார்.
முகாமில் கிருஷ்ணராயபுரம் வட்டார பகுதி பொதுமக்களிடமிருந்து ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல்,முகவரி மாற்றம் மற்றும் அலைபேசி எண் மாற்றம் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டது. மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ரேஷன் கார்டு தொடர்பான மனுக்களுக்கு உடனடி தீர்வும் மேற்கொள்ளப்பட்டது. வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் உடனிருந்தார்.
The post கிருஷ்ணராயபுரம் பகுதியில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம் appeared first on Dinakaran.