×

தாயை அடித்து கொன்ற நாதக நிர்வாகி கைது

தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே தளிர் மருங்கூர் தெற்கு குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலி(75). இவர் நேற்று முன்தினம் வீட்டின் வெளியே கட்டிலில் படுத்திருந்தபோது கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தொண்டி போலீசார் நடத்திய விசாரணையில் ஜெயசீலியின் மூத்த மகன் அருள் செல்வம் (48), சொத்து பிரிப்பது தொடர்பாக தாயுடன் ஏற்பட்ட பிரச்னையில் அவரை கம்பால் தலையில் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அருள் செல்வத்தை, தொண்டி போலீசார் நேற்று கைது செய்தனர். அருள் செல்வம், நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய தொழிலாளர் பாசறை நிர்வாகியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தாயை அடித்து கொன்ற நாதக நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : Nathaka ,Thondi ,Jayaseeli ,Thalir Marungur South ,Ramanathapuram district ,Dinakaran ,
× RELATED காளையார்கோவில் பகுதியில் காவிரி...