×

திருவள்ளூரில் பைக் மீது மோதாமல் இருக்க திருப்பியபோது டிரான்ஸ்பார்மர் மீது லாரி மோதல்

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கருக்கு உதிரி பாகங்களை ஏற்றி கொண்டு சரக்கு லாரி திருவள்ளூர் வழியாக வந்து கொண்டிருந்தது. ஜார்ஜ் என்பவர் லாரியை ஓட்டி வந்துள்ளார். திருவள்ளூர் நகர எல்லையான வடக்கு ராஜவீதியில் வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பிய போது அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் மீது லாரி மோதியது. இதில் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பம் முழுவதும் சேதமடைந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தகவலறிந்து செயற்பொறியாளர் கனகாரஜ், உதவி செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் தட்சிணா மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

சேதமடைந்த டிரான்ஸ்பார்மர் மற்றும் கம்பத்தை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டனர். இந்த சம்பவத்தால் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட வீடுகள், 150க்கும் மேற்பட்ட கடைகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்வாரிய ஊழியர்கள் போராடி டிரான்ஸ்பார்மரை சீரமைத்து பொதுமக்களுக்கு மின்சாரம் வழங்கினர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் லாரியை திருவள்ளூர் டவுன் போலீசார் பறிமுதல் செய்தனர். ெதாடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

The post திருவள்ளூரில் பைக் மீது மோதாமல் இருக்க திருப்பியபோது டிரான்ஸ்பார்மர் மீது லாரி மோதல் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Kummipipundi ,Ranipetta district ,Cholingar ,Dinakaran ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்