×

விருதுநகர் மாவட்டம் கடம்பூர் யார்டு பகுதியில் நடைபெறும் சுரங்கப்பாதை பணியால் ரயில் சேவையில் மாற்றம்..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கடம்பூர் யார்டு பகுதியில் நடைபெறும் சுரங்கப்பாதை பணியால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை சுரங்கப் பாதை பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஈரோடு-நெல்லை செல்லக்கூடிய விரைவு ரயில் (16845) நாளை மறுநாள் திண்டுக்கல்-நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை-ஈரோடு செல்லக்கூடிய விரைவு ரயில் (16846) ஜூன் 13-ல் நெல்லை-திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்தானது.

The post விருதுநகர் மாவட்டம் கடம்பூர் யார்டு பகுதியில் நடைபெறும் சுரங்கப்பாதை பணியால் ரயில் சேவையில் மாற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Kadampur Yard Area ,Virudunagar District ,Virudunagar ,Kadampur Yard ,Dinakaran ,
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...