×

வீரசோழன் டாஸ்மாக் கொள்ளை முயற்சி வழக்கில் 2 பேர் கைது

காரியாபட்டி, ஜூன் 10: வீரசோழன் டாஸ்மாக் கொள்ளை முயற்சி வழக்கில் 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். நரிக்குடி அருகே வீரசோழன் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. கடந்த 27ம் தேதி அதிகாலை 2 மணியளவில் டூவீலரில் வந்த 3 மர்மநபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். கேமராக்களை சரமாரியாக உடைத்து கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை மூட்டைகளாக கட்டி வெளியே கொண்டு வந்தனர். அப்போது ரோந்து வந்த போலீசாரை கண்டதும் டூவீலரில் தப்பிவிட்டனர்.

டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் இருளாண்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த வீரசோழன் போலீசார் டாஸ்மாக் கடை சிசிடிவி காட்சிப்பதிவுகளை அடிப்படையாக வைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகா மறவமங்களம் பகுதியை சேர்ந்த அரசபாண்டியன் மகன் குணசேகரன்(22), ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் பண்டாரம் தெருவை சேர்ந்த பகுர்தீன் மகன் முகமது யூசுப்(19) ஆகியோர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து போலீசார் விசாரித்தனர். இதில் இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் இருந்து வருவது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாகியுள்ள மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post வீரசோழன் டாஸ்மாக் கொள்ளை முயற்சி வழக்கில் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Weeracholan ,Tasmac ,Kariyapatti ,Weeracholan Tasmac ,Narikudi ,Dinakaran ,
× RELATED காரியாபட்டி கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டம்