×

தேவதானப்பட்டி அருகே சிறுமி மாயம்

 

தேவதானப்பட்டி, ஜூன் 10: தேவதானப்பட்டி அருகே உள்ள மேல்மங்கலம் ராஜேந்திரபுரத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. பிளஸ் 2 முடித்துள்ள இவர், விடுமுறையில் தையல் பயிற்சி வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தையல் பயிற்சி வகுப்பிற்கு சென்றவர், அதன்பின் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களிலும் அவரை பெற்றோர் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது குறித்து ஜெயமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.

The post தேவதானப்பட்டி அருகே சிறுமி மாயம் appeared first on Dinakaran.

Tags : Devadanapatti ,Melamangalam Rajendrapuram ,
× RELATED மனைவி பணம் தராததால் விவசாயி தற்கொலை