- எம்.பி மைத்ரேயன்
- பாஜா
- புது தில்லி
- முன்னாள்
- எம்.ஜி.பி.மைத்ரேயன்
- எடப்பாடி பழனிசாமி
- ஓ.
- பன்னீர்செல்வம்
- எம்.பி மைத்ரேயன்
- தின மலர்
புதுடெல்லி: அதிமுகவில் முன்னாள் எம்.பி. மைத்ரேயன், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்தாண்டு அக்டோபர் 9ம் தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் மைத்ரேயன் நேற்று பாஜவில் இணைந்தார். தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங், தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் முன்னிலையில் டெல்லியில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் இந்த இணைப்பு நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மைத்ரேயன் கூறியதில், ‘‘ வரும் காலத்தில் தமிழகத்தில் பாஜ மிகப்பெரிய கட்சியாக வலுப்பெற மாநில தலைவர் அண்ணாமலையுடன் இணைந்து பணியாற்றுவேன் இவ்வாறு அவர் கூறினார்.
The post அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் பாஜவில் இணைந்தார் appeared first on Dinakaran.