×

சென்னையில் இன்றும், நாளையும் நடக்கிறது சுற்றுலா அலுவலர் பதவி தேர்வு 3 இடத்துக்கு 173 பேர் போட்டி

சென்னை: சுற்றுலா அலுவலர் பதவிக்கான எழுத்து தேர்வு சென்னையில் இன்றும், நாளையும் நடக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சுற்றுலா அலுவலர் பதவியில் காலியாக உள்ள 3 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 25ம் தேதி வெளியிட்டது. தேர்வுக்கு விணப்பிக்க பிப்ரவரி 23ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வு எழுத 173 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெண்கள் 97 பேர், ஆண்கள் 76 பேர் அடங்குவர். இவர்களுக்கான எழுத்து இன்றும், நாளை என 2 நாட்கள் நடக்கிறது. இன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை கட்டாய தமிழ் மொழி தகுதி தேர்வும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பொது அறிவு தேர்வும் நடக்கிறது. நாளை காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை மூன்றாம் தாள் தேர்வும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 4ம் தாள் தேர்வும் நடக்கிறது. சென்னையில் மட்டும் இந்த தேர்வு நடைபெற உள்ளது.

The post சென்னையில் இன்றும், நாளையும் நடக்கிறது சுற்றுலா அலுவலர் பதவி தேர்வு 3 இடத்துக்கு 173 பேர் போட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil ,Nadu Government Personnel Examination Nadu ,DNBSC ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...