×

தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு: ஐசிஎம்ஆர் ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

டெல்லி: தமிழ்நாட்டில் ஒரு கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐசிஎம்ஆர் ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. இந்திய அளவில் நீரிழிவு நோய் குறித்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது. அதில்; இந்தியாவில் 10 கோடி (11.4%) பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் 16.4% பேர், கிராமங்களில் 8.9% பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக கோவாவில் 26.4% பேருக்கும், அடுத்தப்படியாக புதுச்சேரியில் 26.3 சதவீதம் பேருக்கும், குறைந்த பட்சமாக உத்தப்பிரதேசத்தில் 4.8% பேருக்கும் நீரிழிவு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 14.4% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது ஒரு கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 80 லட்சம் பேர் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. நீரிழிவு பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 6வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் 15.3% பேருக்கும், தமிழ்நாட்டில் 10.2% பேருக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு உள்ளன. நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு கிராமங்கள், நகரங்களில் சமமாக உள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் நாடு முழுவதும் 7 கோடி பேருக்கு நீரிழிவு இருந்தநிலையில், 4 ஆண்டுகளில் 44 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு: ஐசிஎம்ஆர் ஆய்வில் அதிர்ச்சி தகவல்..! appeared first on Dinakaran.

Tags : ICMR ,Delhi ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...