×

பாகம்பிரியாள் கோயிலில் உண்டியல் வசூல் ரூ.12 லட்சம்

திருவாடானை, ஜூன் 9: திருவாடானை அருகே திருவெற்றியூரில் சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பாகம்பிரியாள் சமேத வல்மீக நாத சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான வெளியூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் கோயிலில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல் மூன்று மாதத்திற்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

நேற்று இந்த உண்டியல்கள் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் உண்டியல் திறப்பு நடைபெற்றது. இதில் ரொக்கமாக 11 லட்சத்து 83 ஆயிரத்து 224 ரூபாயும், வெள்ளி 360 கிராமம், தங்கம் 52.500 கிராமம், உண்டியல் மூலம் வருமானமாக கிடைத்துள்ளது. இப்பணியில் சிரஸ்டார் சுப்பிரமணியன், இந்து சமய அறநிலை ஆட்சித் துறை ஆய்வாளர் சண்முகநாதன், சரக கண்காணிப்பாளர் செந்தில் குமார், ஆலய கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன்ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post பாகம்பிரியாள் கோயிலில் உண்டியல் வசூல் ரூ.12 லட்சம் appeared first on Dinakaran.

Tags : Bagambriyal ,Thiruvadanai ,Sametha ,Valmika Natha Swamy ,Sivagangai ,Devasthanam ,Thiruvettiyur ,
× RELATED பாகம்பிரியாள் கோயிலில் உண்டியல் வசூல் ரூ.34 லட்சம்