×

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

 

திருப்பூர், ஜூன் 9: திருப்பூர், நெரிப்பெரிச்சலை அடுத்த திருக்குமரன் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் இளையராஜா (48). தொழிலாளி. இளையராஜாவுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு இளையராஜாவின் மனைவி வெளியே சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத போது இளையராஜா மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Ilayaraja ,Tirukumaran Nagar ,Neripperichal, Tirupur.… ,Dinakaran ,
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்