×

தொழிலாளி தற்கொலை

 

ஈரோடு,ஜூன்9:பவானி கல்தொழிலாளர் முதல் வீதியை சேர்ந்தவர் மகாலிங்கம்(54). தொழிலாளி. திருமணம் ஆகாதவர். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்நிலையில், வாழ்க்கையில் விரக்தி அடைந்த மகாலிங்கம் கடந்த 6ம் தேதி மதுபோதையில் வீட்டிற்கு வந்தவர், அவர் சாப்பிடும் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதைப்பார்த்த அவரது தம்பி குமார், மகாலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Erode ,Mahalingam ,Bhawani ,Dinakaran ,
× RELATED பவானி அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி