×

பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு அபராதம்

பழநி: பழநி மளிகை கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு அபராதம் விதித்தனர். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி உத்தரவின் பேரில் பழநியில் உள்ள மளிகை கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்லத்துரை தலைமையிலான அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இதில் 20க்கும் மேற்பட்ட மளிகை கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு தல ரூ.2ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

The post பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Palani ,shops ,Dinakaran ,
× RELATED பழநி காந்தி மார்க்கெட்டில் பகலில்...