×

ஆருத்ரா மோசடி வழக்கில் கோர்ட் அனுப்பிய சம்மனை எதிர்த்து பாஜ நிர்வாகி ஆர்.கே.சுரேஷ் மனு: அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்து பாஜ நிர்வாகி ஆர்.கே.சுரேஷ் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜ ஒபிசி பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பிருப்பதாக தெரியவந்தது.
அதனடிப்படையில் போலீஸ் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி ஆர்.கே.சுரேசுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு மீண்டும் நீதிபதி சந்திரசேகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் வழக்கறிஞர், மனு குறித்து பதிலளிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் வேண்டும் என்று கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

The post ஆருத்ரா மோசடி வழக்கில் கோர்ட் அனுப்பிய சம்மனை எதிர்த்து பாஜ நிர்வாகி ஆர்.கே.சுரேஷ் மனு: அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Baja ,R.R. K.K. Suresh Manu ,Chennai ,R.R. K.K. ,Suresh ,Administrator ,Dinakaran ,
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...