×

கயர்லாபாத் கிராமத்தில் குவாரிக்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு

 

அரியலூர், ஜூன் 7: அரியலூர் அடுத்த கயர்லாபாத் கிராமத்தில் இன்று நடக்க இருந்த குவாரிக்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட உள்ளது. அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் புதுப்பாளையம் சுண்ணாம்புக்கல் மற்றும் சுண்ணாம்பு கன்கர் குவாரிக்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் இன்று (ஜூன் 7) காலை 10.30 மணி மற்றும் பிற்பகல் 2.30 மணிக்கும் மற்றும் நாளை (ஜூன் 8) காலை 10.30 மணி மற்றும் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் சில நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடக்கும் தேதி பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

The post கயர்லாபாத் கிராமத்தில் குவாரிக்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Khairabad village ,Ariyalur ,Kairlabad ,Dinakaran ,
× RELATED விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு 10 ஆண்டு சிறை