×

டூவீலர் மீது கார் மோதி கல்லூரி மாணவர் பலி

 

கம்பம், ஜூன் 7: கம்பம் நாட்டுக்கல் தெருவை சேர்ந்தவர் முகமது மீரான் மகன் முகமது சபீக் (18). இவர் உத்தமபாளையத்தில் உள்ள கல்லூரியில் ஐடி பிரிவில் 2ம் ஆண்டு படித்து வந்தார். மீரானின் தங்கை மகன சபீக் (17), பிளஸ் 2 மாணவர்.இவர்கள் இருவரும் நேற்று தங்களது டூவீலரில் நெடுங்கண்டம் அருகே உள்ள பூப்பாறை மற்றும் அப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களை காண சென்றுள்ளார். இவர்களோடு பெரியகுளத்தை சேர்ந்த புதிதாக திருமணம் முடித்த அப்பாஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோரும் வேறு டூவீலரில் சென்றுள்ளனர்.

அப்பாஸூம் அவரது மனைவியும் மற்றொரு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். கல்லிப்பாறை என்ற இடத்தில் பூப்பாறையில் இருந்து வந்த கார் மீது முகமது சபீக் ஓட்டிய டூவீலர் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர்களை நெடுங்கண்டம் தாலுகா மருத்துவமனையில் அப்பகுதி பொதுமக்கள் சேர்த்துள்ளனர்.ஆனால் முகமது சபீக் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். உடன் பயணம் செய்த சபிக்கிற்கு பலத்த காயம் ஏற்பட்டு கல்லாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுசம்பந்தமாக சாந்தன்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post டூவீலர் மீது கார் மோதி கல்லூரி மாணவர் பலி appeared first on Dinakaran.

Tags : Kampam ,Mohammad Sabeeq ,Mohammad Meeran ,Natukkal Street, Kampam ,Dinakaran ,
× RELATED கஞ்சா கடத்த முயன்ற 3 பேர் கைது