×

மாந்தோப்பில் பிடிபட்ட மலைப்பாம்பு

சிங்கம்புணரி, ஜூன் 7: சிங்கம்புணரி அருகே மேலப்பட்டி கிராமத்தில் குடியிருப்பு அருகே உள்ள மாந்தோப்பில் சுமார் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு சுற்றித் திரிந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், சிங்கம்புணரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையில் 6 தீயணைப்பு வீரர்கள் சென்றனர். அங்கு மலைப்பாம்பு மற்றும் சாரை பாம்புகள் இருப்பதை பார்த்தனர். உடனடியாக 10 அடி நீள மலைப் பாம்பையும், 8 நீளம் உள்ள சாரை பாம்பையும் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் பிரான்மலை வனப்பகுதியில் பாம்புகள் விடப்பட்டது.

The post மாந்தோப்பில் பிடிபட்ட மலைப்பாம்பு appeared first on Dinakaran.

Tags : Manthop ,Singampunari ,Melapatti ,
× RELATED வாக்குச்சாவடிக்குள் வலிப்பு வந்து...