×

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுதானிய உணவகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர், ஜூன் 6: பெரம்பலூர் மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களிடமிருந்து சிறுதானிய உணவகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2023ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுவதால், அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்திய வேளாண்மையில் முதன்மையாக விளங்க கூடிய சிறுதானியங்கள் விவசாயிகளின் வருமான த்தை உயர்த்துவதுடன் உ ணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய் கின்றன. தமிழ்நாடு அரசு சிறுதானிய உணவு வகை களை பிரபலபடுத்த பல் வேறு முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைத்திட கீழ்கண்ட நிபந்தனைகளுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சிறுதானிய உணவகம் நட த்திட விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், கூட் டமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மகளிர் குழு துவங்கப்பட்டு குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் முடிவுற் றிறுக்க வேண்டும். தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம் (NRLM), மேலாண்மை தகவல் அமைப்பு (MIS) இ ணையதளத்தில் பதிவு செ ய்திருக்க வேண்டும். கூட்டமைப்பாக இருக்கும் பட்சத் தில் தர மதிப்பீடு செய்யப்பட்டு ஏ அல்லது பி சான்று பெற்றிருக்க வேண்டும்.

உற்பத்தியாளர் குழுவாக இருக்கும் பட்சத்தில் தர மதிப்பீடு செய்யப்பட்டு திட்ட நிதி பெறப்பட்டிருக்க வேண்டும். மகளிர் சுய உத விக் குழு, உற்பத்தியாளர் குழு கூட்டமைப்புசிறுதானி ய உணவு உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடையவராக இருத்தல்வேண்டும். மாவட் ட கலெக்டர் பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ள அல் லது அதனை சுற்றியுள்ள ஊராட்சியின் மகளிர் சுய உதவிக் குழு, உற்பத்தியா ளர் குழு, கூட்டமைப்பு மட் டுமே தேர்வு செய்ய வேண் டும் போன்ற நிபந்தனைக ளுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் இதுகுறித்த விரிவான விவரங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை நேரில் அணுகலாம் எனத் தெரிவித்துள்ளார்.

 

The post பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுதானிய உணவகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Perambalur district ,Perambalur ,District ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி