×

நாட்றம்பள்ளி அருகே டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்த மினிலாரியில் சிதறிய மாங்காய்கள்-டிரைவர் உயிர் தப்பினார்

நாட்றம்பள்ளி : நாட்றம்பள்ளி அருகே மினிலாரியின் டயர் வெடித்ததில் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், மாங்காய்கள் ரோட்டில் சிதறின. அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்.நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் இருந்து நேற்று மதியம் மாங்காய் லோடு ஏற்றிக்கொண்டு மினிலாரி ஒன்று வாணியம்பாடி நோக்கி புறப்பட்டது.
நாட்றம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் வந்தபோது லாரியின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையின் நடுவே தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதில் லாரியில் இருந்த மாங்காய்கள் சாலையில் சிதறியது. இதைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் உடனே சாலையில் கிடந்த மாங்காய்களை பாதுகாப்பாக அகற்றிவிட்டு, லாரியை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

The post நாட்றம்பள்ளி அருகே டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்த மினிலாரியில் சிதறிய மாங்காய்கள்-டிரைவர் உயிர் தப்பினார் appeared first on Dinakaran.

Tags : Nadrampalli ,Dinakaran ,
× RELATED சாலை விபத்தில் படுகாயம் அடைந்த...