×

திருச்செந்தூர் கடலில் வாலிபர் மர்மச்சாவு

திருச்செந்தூர், ஜூன் 6: தூத்துக்குடி அருகேயுள்ள மடத்தூரை சேர்ந்த இசக்கிமுத்து மனைவி ராமலெட்சுமி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். 2வது மகன் பெரியசாமி (24), சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர், வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கோயிலுக்கு வந்தார். நேற்று முன்தினம் மாலையில் அய்யா கோயில் அருகே பெரியசாமி, கடலில் குளிக்கும்போது உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தார். தகவலறிந்து திருச்செந்தூர் கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதிநாயகம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி பெரியசாமி உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுதொடர்பாக பெரியசாமியின் தாய் ராமலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருச்செந்தூர் கடலில் வாலிபர் மர்மச்சாவு appeared first on Dinakaran.

Tags : Tiruchendur ,Isakkimuthu ,Ramaletsumi ,Madathur ,Thoothukudi ,Thiruchendur ,
× RELATED கோடை விடுமுறையை கொண்டாட கொளுத்தும் வெயிலிலும் குவிந்த பக்தர்கள்