×

சிறுமியை மிரட்டி பலாத்காரம் போக்சோவில் முதியவர் கைது

நெய்வேலி, ஜூன் 6: வடலூர் அடுத்துள்ள பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். தாய், தந்தை இருவரும் உயிரிழந்த நிலையில் வடலூர் அருகே உள்ள அத்தை வீட்டில் சிறுமி வசித்து வந்தார். அவரது அத்தை அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அத்தையின் கணவர் இல்லாததால் அவர் நடத்தி வரும் பெட்டி கடைக்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுப்பதற்கு கீழ்வடக்குத்து கிராமத்தை சேர்ந்த செல்வராஜ்(56) என்பவர் உதவி செய்து வந்துள்ளார்.

கடந்த மூன்று மாதமாக லட்சுமிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடைக்கு தேவையான பொருட்கள் வாங்குவது, சிறுமியை பள்ளிக்கு அழைத்து செல்வது போன்ற பல்வேறு உதவிகளையும் செல்வராஜ் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி செல்வராஜ் தனது இரு சக்கர வாகனத்தில் சிறுமியை வடலூர் ரயில் ரோடு அருகே வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுள்ளார். பின்னர் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது அத்தையிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து நெய்வேலி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை செய்து செல்வராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post சிறுமியை மிரட்டி பலாத்காரம் போக்சோவில் முதியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Pooxo ,Naiveli ,Vadalore ,Boxo ,
× RELATED குள்ளஞ்சாவடி அருகே நள்ளிரவில்...