×

நக்சலைட் தாக்குதல் 3 சிஆர்பிஎப் வீரர்கள் காயம்

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தின் பிஜாபூர் மாவட்டத்தில் கங்கலூர் காவல் எல்லைக்குட்பட்ட மலைஅடிவாரத்தில் உள்ள தேகமேதா பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், மாநில போலீசாருடன் இணைந்து புஸ்நார் முகாமில் இருந்து சிஆர்பிஎப் வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நக்சல்கள் பதுக்கி வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி 3 வீரர்கள் காயமடைந்தனர். பிஜாபூர் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர், அங்கிருந்து விமான ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக ராய்ப்பூர் கொண்டு செல்லப்பட்டனர்.

The post நக்சலைட் தாக்குதல் 3 சிஆர்பிஎப் வீரர்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : 3 ,CRPF ,Naxalite ,Raipur ,Naxalites ,Tegamedha ,Kangalur ,Bijapur ,Chhattisgarh ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் சிஆர்பிஎப் முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்; 2 வீரர்கள் பலி