×

கூடலூர் வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் சடலம் மீட்பு

கூடலூர், ஜூன் 5: கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வெட்டுக்காடு அருகே வேளாங்காடு வனப்பகுதியில் வனவர் திருமுருகன், வனக்காப்பாளர் கர்ணன் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதிக்குள் மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்குபோட்டு இறந்த நிலையில் இருப்பதைக் கண்ட வனத்துறையினர் இதுகுறித்து லோயர்கேம்ப் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

லோயர்கேம்ப் எஸ்ஐ மூவேந்தன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின் போலீசார் நடத்திய விசாரனையில் இறந்த வாலிபர் கூடலூர் 13 வது வார்டு எம்.ஜி.ஆர் காலனியைச் சேர்ந்த சமயன்(28) எனத் தெரியவந்தது. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் லோயர்கேம்ப் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

The post கூடலூர் வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Gudalur forest ,Kudalur ,Forester Thirumurugan ,Karnan ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்