×

மலேசியாவில் நடந்த போட்டியில் தங்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு

வேதாரண்யம்: மலேசியாவில் நடந்த கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு விழா நடந்தது. வேதாரண்யம் தாலுகா தேத்தாக்குடி தெற்கு சேர்ந்தவர் அழகேசன் மலர்விழி தம்பதியரின் மகன் அகிலரசு (12) இப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பல்வேறு கராத்தே போட்டியில் கலந்துகொண்டு 25க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் கோப்பைகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் மலேசியாவில் நாட்டில் ஈபோவில் நடைபெற்ற 19வது அனைத்து உலக கரத்தே போட்டியில் 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான போட்டியில் பங்கு பெற்ற போட்டியில் தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.

மேலும் தனி திறன் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளார். மலேசியாவில் நடைபெற கரத்தே போட்டியில் இந்தியா இந்தோனேசியா, சிங்கப்பூர், சீனா, மலேசியா, நேபாளம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சுவிட்சர்லாந்து, புருனே, தென்னாப்பிரிக்கா, மொராக்கோ உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 1300 பேர் போட்டியில் கலந்து கொண்டனர். இதில்12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நடைபெற்ற கராத்தே போட்டியில் தங்கம் வென்றார். மலேசியா நாட்டில் தங்கம் வென்று வந்த மாணவன் அகிலரசுக்கு, தேத்தாகுடி தெற்கு ஊராட்சி மன்றம் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற சமுதாய கூடத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் வனஜா சண்முகம் தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேதாரத்தினம், தொழிலதிபர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவன் அகிலரசுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் வனஜா சண்முகம் நினைவு பரிசு வழங்கினார். விழா முடிவில் ஊராட்சி துணை தலைவர் அழகேசன் நன்றி கூறினார்.

 

The post மலேசியாவில் நடந்த போட்டியில் தங்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Malaysia ,Vedaranyam ,Taluk Thathakkudi South ,
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது...