×

நீதிமன்றத்திற்குள் புகுந்து வாளால் வெட்டியவருக்கு ஆஜராவதில்லை வழக்கறிஞர்கள் தீர்மானம்

 

ராமநாதபுரம், ஜூன் 5: ராமநாதபுரம் வழக்கறிஞர் சங்க தலைவர் சேக் இப்ராகீம், செயலாளர் கருணாகரன், பொருளாளர் பாபு ஆகியோர் கூறும்போது, ‘‘ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் அமைந்துள்ள நீதித்துறை நடுவர் எண்.2 நீதிமன்றத்தில் ஒரு குற்ற வழக்கில் ஆஜராக வந்த அசோக்குமார் என்பவரை, ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடையைச் சேர்ந்த ரவுடி கொக்கி குமார், நீதிமன்றத்திற்குள் அத்திமீறி நுழைந்து வாளால் வெட்டியுள்ளார்.

பின்னர் சர்வ சாதாரணமாக நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்து சென்று தப்பித்துள்ளார். அவருடைய இந்த மனிதாபிமானமற்ற குற்றச்செயலை ராமநாதபுரம் வழக்கறிஞர் சங்கம் மிகவும் கடுமையாக ஆட்சேபனை செய்கிறது. இக்குற்ற வழக்கு சம்பந்தமாக அவர்களுக்கு ஆதரவாக ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜர் ஆவதில்லை என ஏக மனதாக முடிவு செய்யப்பட்டு தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது’’ என்றனர்.

The post நீதிமன்றத்திற்குள் புகுந்து வாளால் வெட்டியவருக்கு ஆஜராவதில்லை வழக்கறிஞர்கள் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Ramanathapuram Bar Association ,President ,Sheikh Ibrahim ,Karunakaran ,Treasurer ,Babu ,
× RELATED மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த கோடை மழை: உழவு பணியை துவக்க அறிவுறுத்தல்