×

ஞானவாபி வழக்கில் முக்கிய மனுதாரர் வாபஸ்

வாரணாசி: ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள சிருங்கார் கவுரி உள்ளிட்ட இந்து தெய்வங்களை வழிபட அனுமதி கோரி ராக்கி சிங் உள்பட 5 பெண்கள் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிறப்பு விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றி அங்கு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், முக்கிய மனுதாரர்களில் ஒருவரான ஜிஜேந்திர சிங் விசென், ஞானவாபி மசூதி தொடர்பாக நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இந்துக்கள் உள்பட அனைத்து தரப்புகளில் இருந்தும் துன்புறுத்தப்படுவதால் இதில் இருந்து வாபஸ் பெறுவதாக கூறினார். இவரது வக்கீல் ஷிவம் கவுர் இதற்கு முன்பே, இந்த வழக்கில் இருந்து விடுவித்து கொண்டார்.

The post ஞானவாபி வழக்கில் முக்கிய மனுதாரர் வாபஸ் appeared first on Dinakaran.

Tags : Gnanavabi ,Varanasi ,Rakhi Singh ,Chirungar Gauri ,Dinakaran ,
× RELATED காசி விஸ்வநாதர் கோயிலில் போலீசுக்கு காக்கிக்கு பதில் காவி உடை