×

வேலூர் மேல்நிலைப்பள்ளியில் 50 ஆண்டுக்கு பிறகு ஆசிரியர்களை சந்தித்து மாணவர்கள் நெகிழ்ச்சி

வேலூர்: வேலூர் வெங்கடேஸ்வரா அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பல்வேறு பேட்ஜ்களாக அமைப்புகளை ஏற்படுத்தி ஆண்டுக்கொருமுறை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று 1973-74ம் கல்வி ஆண்டில் பள்ளி இறுதி வகுப்பு முடித்த 120 மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி வளாகத்தில் சந்தித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் நெப்போலியன் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் அவர்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் வணங்கி மகிழ்ந்தனர். தொடர்ந்து தாங்கள் பயின்ற வகுப்பறைகளின் கரும்பலகைகளுக்கு புதிய வர்ணம் அடித்தும், குடிநீர் தொட்டி, கை அலம்பும் இடம் ஆகியவற்றை சீரமைத்தும் தந்தனர். அதோடு பள்ளிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளை செய்து தருவதாகவும் உறுதி அளித்தனர்.

The post வேலூர் மேல்நிலைப்பள்ளியில் 50 ஆண்டுக்கு பிறகு ஆசிரியர்களை சந்தித்து மாணவர்கள் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Vellore High School ,Vellore ,Vellore Venkateswara Government Aided Higher Secondary School ,Vellore Higher Secondary School ,Dinakaran ,
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...