×

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டு சென்னை திரும்புபவர்களுக்கு உதவ 30 மருத்துவக் குழுக்கள் அமைப்பு: தமிழ்நாடு அரசு தகவல்

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டு சென்னை திரும்புபவர்களுக்கு உதவ 30 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் கூடுதலாக 10 ஆம்புலன்ஸ்களும் சென்னையில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் வீல் சேர், ஸ்டிரெச்சர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை திரும்பியவர்களின் போக்குவரத்து வசதிக்காக 7 பேருந்துகள், 50 டாக்ஸிகள் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய மருத்துவத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறையினர் தயாராக உள்ளனர்

The post ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டு சென்னை திரும்புபவர்களுக்கு உதவ 30 மருத்துவக் குழுக்கள் அமைப்பு: தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Organization of 30 medical teams ,Odisha train crash ,Chennai ,Tamil Nadu Government ,Odisha ,train crash ,30 Medical Groups ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...