×

அண்ணன், தம்பி மண்டை உடைத்த 2 நண்பர்கள் கைது விரிஞ்சிபுரம் அருகே கோஷ்டி தகராறில்

பள்ளிகொண்டா, ஜூன் 3: விரிஞ்சிபுரம் அருகே விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் அண்ணன், தம்பியை பீர்பாட்டிலால் தாக்கிய நண்பர்கள் 2 பேரை விரிஞ்சிபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விரிஞ்சிபுரம் அடுத்த கருகம்பத்தூர் கழனிகாட்டு தெருவை சேர்ந்தவர் குமார்(43), இவரது நண்பர் ராஜ்(28). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கன்னிகோயில் அருகே நண்பர்களுடன் தாயம் மற்றும் ஆடுபுலி ஆட்டங்கள் என விளையாடி கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கே வந்த அதேபகுதியை சேர்ந்த இவர்களது நண்பர்களான செல்வம், ராஜ் மற்றும் நண்பர்களுக்கு விளையாட்டில் ஒரு சில யோசனைகளை கூறியுள்ளார். முடிவில் குமார் தோல்வியுற்றதாக கூறப்படுகின்றது. இதனால் செல்வம் மீது ஆத்திரமடைந்த குமார் பீர்பாட்டிலால் அவரை தாக்கியுள்ளார். இதனை அறிந்த செல்வத்தின் அண்ணன் ராஜேஷ் மற்றும் அவரது உறவினர்கள் மகேந்திரன், வினோத் குமார் ஆகியோர் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதில் இரு கோஷ்டிக்கும் தகராறு முற்றியதில் மீண்டும் குமார் பீர் பாட்டில் எடுத்து ராஜேஷ் மண்டையில் தாக்கியுள்ளார். மேலும், வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்து ராஜேஷ் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வீசியுள்ளார். இதனால் செல்வம், ராஜேஷ், மகேந்திரன் உட்பட அனைவரும் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை ராஜேஷ் விரிஞ்சிபுரம் போலீசில் குமார் மற்றும் அவரது நண்பர் ராஜ் மீது புகார் அளித்தார். அதன்பேரில், இருவர் மீதும் வழக்குப்பதிந்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post அண்ணன், தம்பி மண்டை உடைத்த 2 நண்பர்கள் கைது விரிஞ்சிபுரம் அருகே கோஷ்டி தகராறில் appeared first on Dinakaran.

Tags : Virinchipuram ,Pallikonda ,
× RELATED வேலூர் சைபர் கிரைம் போலீஸ்...