×

அரசு கலைக் கல்லூரியில் மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் மணக்கோலத்தில் மாணவி தேர்வு எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை அடுத்த பூதமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் குமுதா (21). இவர் திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. வரலாறு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவி குமுதாவுக்கு நேற்று காலை மங்களம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

நேற்று பிஏ மூன்றாம் ஆண்டு பருவத் தேர்வு நடந்தது. எனவே திருமணம் நடந்த சில நிமிடங்களில் குமுதா மணக்கோலத்தில் திருவண்ணாமலை அரசு கல்லூரிக்கு வந்து தேர்வு எழுதினார். தேர்வினை தவறவிட்டால் ஒரு ஆண்டு பாதிக்கப்படும் என்பதால், திருமணத்தன்று நேரடியாக தேர்வுக்கு வந்ததாக தெரிவித்தார்.மணக்கோலத்தில் கல்லூரிக்கு சென்று தேர்வு எழுதிய மாணவியை பேராசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர்.

The post அரசு கலைக் கல்லூரியில் மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி appeared first on Dinakaran.

Tags : Government Arts College ,Manakolam ,Thiruvannamalai ,Tiruvannamalai Government Arts College ,Bhoothamangalam ,
× RELATED பரமக்குடி அரசு கல்லூரியில் அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி