×

கீழே கிடந்த நகைகளை திருப்பி ஒப்படைத்தவருக்கு பாராட்டு

 

போடி, ஜூன் 2: போடி அருகே பத்ரகாளிபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் குருசாமி. இவர் மனைவி ராஜேஸ்வரி (38) 7 பவுன் நகைகளை எடுத்து கொண்டு நேற்று போடி பெரியாண்டவர் கோயில் பொன்னம்பலம் தெருவில் உள்ள ஒரு தனியார் வங்கியில் அடகு வைக்க சென்றார். அப்போது அவர் வங்கியின் வாசலில் நகைகளை தவற விட்டுள்ளார்.

அப்போது அவ்வழியே வந்த போடி சுப்புராஜ் நகர் புதுகாலனி வெள்ளைக்காரன் ஹாஸ்டல் சாலையில் குடியிருக்கும் சென்றாயன் (39), வங்கி வாசல் முன்பாக விழுந்த கிடந்த பேக்கை எடுத்துப் பார்த்துள்ளார். அதில் நகைகள் இருப்பதை கண்டதும், போடி நகர் காவல் நிலையத்தில் நகைகளை ஒப்படைத்தார். அதன்பின் ராஜேஸ்வரி வரவழைக்கப்பட்டு நகைகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. நகைகதள காவல் நிலையத்தில் ஒப்படைத்த சென்றாயனுக்கு இன்ஸ்பெக் டர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

The post கீழே கிடந்த நகைகளை திருப்பி ஒப்படைத்தவருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Bodi ,Kurusamy ,Badrakhalipuram Pillayar Temple Street ,Rajeswari ,Dinakaran ,
× RELATED காட்டுமாடு முட்டி விவசாயி படுகாயம்