- மரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
- ராமநாதபுரம்
- ஆர்.கவனுர்
- நடராஜ குருமன்
- Muthumariyamman
- விநாயகர்
- கூடலடி இந்திரா
- நகர்…
- மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ராமநாதபுரம், ஜூன் 2: ராமநாதபுரம் அருகே ஆர்.காவனூர் நடராஜர் பெருமானார், முத்துமாரியம்மன், விநாயகர் மற்றும் கடலாடி இந்திரா நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை பூஜைகள், குருக்கள் வேதமந்திரங்களுடன் நேற்று முன்தினம் துவங்கியது. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி, நவகிரஹ, மிருத்தஞ்சன உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தது.
முதல்காலம் முதல் நான்கு கால பூஜைகள் வரை நடத்தப்பட்டு யாக சாலையில் இருந்து கடம் புறப்பட்டு கோயில் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. இரண்டு கோயில்களிலும் சாமி விக்கிரத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது.
The post மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.