×

ஊட்டி-மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் 2 மார்க்கங்களிலும் வாகனங்களுக்கு அனுமதி

 

ஊட்டி, ஜூன் 2: ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலையில் இரு மார்க்கத்திலும் நேற்று முதல் வாகனங்கள் செல்ல காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆண்டுதோறும் நீர் மாவட்டத்திற்கு கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பல லட்சம் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கார், வேன் மற்றும் தனியார் பஸ்களில் வருகின்றனர். அதேபோல சமவெளி பகுதிகளில் இருந்து வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் – குன்னூர் மார்க்கத்தில் ஊட்டி வருகின்றனர். இதனால், இவ்விரு மாதங்கள் ஊட்டி – மேட்டுப்பாளையம் சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் பாதிக்கின்றனர்.

The post ஊட்டி-மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் 2 மார்க்கங்களிலும் வாகனங்களுக்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Ooty-Mettupalayam ,Ooty ,Dinakaran ,
× RELATED மழை பெய்யாத நிலையில் ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம்