×

முத்தையாபுரம் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஸ்பிக்நகர், ஜூன் 2:முத்தையாபுரம் அருகே 9ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முத்தையாபுரம் நேருஜி நகரை சேர்ந்த முருகன் மகள் தர்ஷினி(14). இவர் அருகில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். 9ம் வகுப்பில் தோல்வி அடைந்ததால் மனவருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் தர்ஷினி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post முத்தையாபுரம் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Muthiyapuram ,Spignagar ,Nehruji Nagar ,
× RELATED தூத்துக்குடியில் ஹேர்டை குடித்து ஆசிரியை தற்கொலை