×

மீஞ்சூர் அருகே நள்ளிரவில் காருக்கு தீ வைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

பொன்னேரி: மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அரியன்வாயல் பகுதியில் வசித்து வருபவர் சேக் அகமது(40). இவர் பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். அரியன்வாயல் பகுதியில் இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தன் வீட்டின் முன் வாசலில் தனது காரை நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில், நேற்றுமுன்தினம் நள்ளிவு ரோந்து பணியில் ஈடுபட்ட மீஞ்சூர் போலீசார் கார் எரிவதை பார்த்து, உடனே உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். வீட்டு உரிமையாளர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். அதற்குள், காரின் முன் பகுதி முழுவதும் எரிந்து சாம்பலானது. இது குறித்து காரின் உரிமையாளர் ஷேக் அகமது மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து, காருக்கு தீ வைத்த மர்ம நபர்களை விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

The post மீஞ்சூர் அருகே நள்ளிரவில் காருக்கு தீ வைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Meenjoor ,Ponneri ,Sheikh Ahmed ,Arianvayal ,Ambedkar ,Meenjur ,Dinakaran ,
× RELATED பொன்னேரி அருகே கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு