×

சென்றம்பாக்கம் ஊராட்சியில் கிராம ஊராட்சி சேவை மையம் திறப்பு விழா: எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் பங்கேற்பு

புழல்: புழல் ஒன்றியம், சென்றம்பாக்கம் ஊராட்சியில் ரூபாய் 17 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கிராம ஊராட்சி சேவை மையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ராமு தலைமை தாங்கினார். புழல் ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் சரவணன், ஊராட்சி துணைத் தலைவர் தசரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாதவரம் தொகுதி எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் கலந்து கொண்டு கட்டி முடிக்கப்பட்ட கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தை திறந்து வைத்து 200 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் கட்டிட வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய அவைத் தலைவர் வழக்கறிஞர் செல்வமணி, மகளிர் சுய உதவி குழு நிர்வாகிகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சென்றம்பாக்கம் ஊராட்சியில் கிராம ஊராட்சி சேவை மையம் திறப்பு விழா: எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Village Panchayat Service Center ,Ganambakkam Panchayat ,MLA S.Sudarsanam ,Puzhal ,Ganambakkam ,panchayat ,
× RELATED பூட்டியே கிடக்கும் கிராம ஊராட்சி சேவை...