பாரிஸ்: கஜகிஸ்தான் வீராங்கனை எலனா ரைபாகினா(23வயது, 4வது ரேங்க்) செக் குடியரசு வீராங்கனை லிண்டா நோஸ்கோவா(18வயது, 50வது ரேங்க்) ஆகியோர் நேற்று மோதினர். நடப்பு விம்பிள்டன் சாம்பியனான ரைபாகினா அதிரடியாக விளையாடி ஒரு மணி 26நிமிடங்களில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் லிண்டாவை சாய்த்தார். முதல் சுற்றில் செக் குடியரசு வீராங்கனையை வீழ்த்திய ரைபாகினா, 2வது சுற்றிலும் செக் குடியரசு வீராங்கனையை சாய்த்துள்ளார்.
அடுத்து 3வது சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை சாரா டோர்மோ(26வயது, 132வது ரேங்க்) உடன் மோத உள்ளார். சாரா டோர்மோ, முன்னதாக நடந்த 2வது சுற்றில் குரோஷியா வீராங்கனை பெட்ரா மார்டிக்கை(32வயது, 38வது ரேங்க்) எதிர்கொண்டார். அதில் சாரா ஒரு மணி 29நிமிடங்களில் 6-4, 6-1 என நேர் செட்களில் பெட்ராவை வென்றார். மகளிர் ஒற்றையர் பிரிவில் பிரேசிலின் ஹாதாத் மாயா 2-1 என்ற செட்களில் ரஷ்யாவின் டயானா ஷ்னைவரையும், ஆடவர் ஒற்றையர் பிரிவில் அர்ஜென்டினாவின் தாமஸ் மார்டின் 3-0 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் அலெக்சையும் வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினர்.
The post 3வது சுற்றுக்கு முன்னேறிய ரைபாகினா சாரா appeared first on Dinakaran.