×

தாம்பரம் – பல்லாவரம் இடையே கூட்டு குடிநீர் பைப் உடைந்து சாலையில் ஓடும் தண்ணீர்

ஸ்ரீபெரும்புதூர்: தாம்பரம் – பல்லாவரம் கூட்டு குடிநீர் பைப் உடைந்து, 6 மாதமாக தண்ணீர் வீணாகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், மேலச்சேரி, பழையசீவரம், வெங்குடி ஆகிய 3 இடங்களில் திறந்தவெளி கிணறு மற்றும் ஆய்துளை கிணறு அமைத்து பல்லாவரம், தாம்பரம் நகர மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யபடுகிறது. அதற்காக பழைய சீவரம் பகுதியில் இருந்து வாலாஜாபாத், ஒரகடம், படப்பை, மண்ணிவாக்கம் வழியாக பைப்லைன் புதைத்து, தாம்பரம் மற்றும் பல்லாவரம் பகுதி மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது தாம்பரம் அருகே பனப்பாக்கம், செரப்பணஞ்சேரி, ஆரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பைப்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், தண்ணீர் வீணாக வெளியேறி வருகின்றது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு. பலமுறை தகவல் கொடுக்கபட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை சரிசெய்து தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post தாம்பரம் – பல்லாவரம் இடையே கூட்டு குடிநீர் பைப் உடைந்து சாலையில் ஓடும் தண்ணீர் appeared first on Dinakaran.

Tags : Tambaram-Pallavaram ,Tambaram ,Pallavaram ,Kanchipuram district ,Melachery ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதியில் பாதாள...