×

சொத்து பிரச்னையில் வழக்கறிஞரை தாக்கிய சகோதரர் கைது

திண்டிவனம், ஜூன் 1: திண்டிவனம் முருங்கப்பாக்கம் அய்யாசாமி தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் ஜவகர்(52), வழக்கறிஞர். இவரது சகோதரர் ரகுபதி (48). இவர் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்குள் சொத்து பிரச்னை இருந்து வருகிறது. இதில் பாகம் பிரித்து, ரகுபதி கீழ் வீட்டிலும், ஜவகர் மாடி வீட்டிலும் வசித்து வருகின்றனர். இவர்கள் பொதுவாக பயன்படுத்தி வந்த கிணற்றுக்கு செல்லும் மோட்டார் பீஸ் கேரியரை ரகுபதி பிடுங்கி வைத்துள்ளார்.

இதை ஜவகர் நேற்று முன்தினம் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த ரகுபதி, அண்ணன் ஜவகரை இடது மார்பில் அடித்து மாடிபடியில் இருந்து தள்ளி விட்டுள்ளார். இதில், கைப்பிடி சிலாப் உடைந்து ஜவகர் மீது விழுந்ததில், அவரது தலை மற்றும் நெஞ்சு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரை உறவினர்கள் மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ரோசணை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, ரகுபதியை கைது செய்தனர்.

The post சொத்து பிரச்னையில் வழக்கறிஞரை தாக்கிய சகோதரர் கைது appeared first on Dinakaran.

Tags : Thindivanam ,Ranganathan ,Jawakar ,Thindivanam Murungupakam Ayasamy Street ,Ragubati ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...