×

ஒப்பந்த தொழிலாளி திடீர் மரணம் என்எல்சி அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை

வடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே ஊத்தங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (54). இவரது தம்பி செல்வராஜ். இருவரும் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் 2ல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த தொழிலாளியாக உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்ற 2 பேரும் வேலை முடிந்து நேற்று காலை சுரங்கத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றனர். அப்போது திடீரென ராஜேந்திரன் மயக்கம் வருவதாக கூறவே 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜேந்திரனை என்எல்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர், அவர் இறந்துவிட்டதாக கூறினார். தகவலறிந்து உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் என்எல்சி நிலக்கரி சுரங்கம் 2வது நிர்வாக அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது ராஜேந்திரன் குடும்பத்துக்கு நிவாரண நிதி ரூ. 15 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர ஒப்பந்த பணி வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

The post ஒப்பந்த தொழிலாளி திடீர் மரணம் என்எல்சி அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : NLC ,Rajendran ,Uthankal ,Neeveli, Cuddalore district ,Selvaraj ,
× RELATED சென்னை அருகே சித்த மருத்துவமனையில்...