×

மாணவர்கள் பள்ளி சீருடையில் வந்தால் பஸ் பாஸ் கேட்கக்கூடாது : தமிழக போக்குவரத்துத்துறை உத்தரவு

சென்னை : பள்ளி சீருடைகளில் வரும் மாணவர்களை அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகிற 7ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. இதன் காரணமாக பாடபுத்தகங்கள் விநியோகிக்கப்பது, சீருடைகள் வழங்குவது, பஸ் பாஸ், பள்ளிகளில் தூய்மை பணி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. நடப்பாண்டில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் ‘ஸ்மார்ட் கார்டாக’ வருகிற ஜூன் அல்லது ஜூலை மாத இறுதிக்குள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளி சீருடைகளில் வரும் மாணவர்களை அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை காண்பித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணம் செய்யலாம். சீருடை அணிந்திருந்தாலோ அல்லது அடையாள அட்டைகளை வைத்திருக்கும் மாணவர்கள் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டால் நடத்துனர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,’என்றார். கட்டணமில்லா புதிய பஸ் பயண அட்டை வழங்கும் பணிக்கான கால அளவை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மாணவர்கள் பள்ளி சீருடையில் வந்தால் பஸ் பாஸ் கேட்கக்கூடாது : தமிழக போக்குவரத்துத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Transport Department ,Chennai ,Transport Department ,
× RELATED மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வரும்...