×

“உண்மையை ஆராயாமல் வசவுகளை அள்ளி தெளிக்கிறார் எடப்பாடி பழனிசாமி” : அமைச்சர் சக்கரபாணி கண்டனம்

சென்னை : தருமபுரியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சேமித்து வைக்கப்பட்ட 7,000 நெல்மூட்டைகள் மாயமானதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தர்மபுரி மாவட்டத்தில் வெற்றிலைக்காரன்பள்ளம் கிடங்கில் 22273 மெட்ரிக் டன் நெல் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. அதில் 7174 மெட்ரிக்டன் அரவைக்கு அனுப்பியது போக 15099 மெட்ரிக்டன் இருப்பு உள்ளது. இதிலிருந்து தான் 7000 டன் இருப்பில் இல்லை என்று இரு தரப்பினர் முரணாகக் கூறுவதாகக் கேள்விக்குறியுடன் செய்தி வந்ததைப் ஆட்சித்தலைவரையும் பார்த்தவுடனே தமிழ்நாடு தர்மபுரி மாவட்ட நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குரையும் அந்தக் கிடங்கில் 100% தணிக்கை செய்து உண்மைத்தன்மையை ஆணையிட்டுள்ளேன்.

அதற்குள் அவசரப்பட்டு வெளிநாட்டு முதலீடுகளை தன்னால் செய்ய ஒன்றைச் செய்கிறாரே என்று பொறாமையின் உச்சகட்டத்தில் உண்மையிலேயே ஈர்த்து வரும் நம் முதல்வர் அவர்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் பத்திரிக்கையில் வந்த செய்தியை ஆராயாமல் வசவுகளை அள்ளித் தெளிக்கிறார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள். காரணமாகவும் முடியாத தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்காது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

The post “உண்மையை ஆராயாமல் வசவுகளை அள்ளி தெளிக்கிறார் எடப்பாடி பழனிசாமி” : அமைச்சர் சக்கரபாணி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Minister ,Chakrapani ,Chennai ,Edappadi ,Tamil Nadu Consumer Goods Trading Corporation ,Dharmapuri ,
× RELATED வெற்றியை இலக்காக கொண்டு தேர்தல்...